Friday, 15 December 2017

திரு.கோ.விஸ்வநாதன் அவர்களின் உரை ..

வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.கோ.விஸ்வநாதன் புதுச்சேரியில் 12.12.2017 அன்று நடைபெற்ற தமிழியக்கம் அமைப்பு உருவாக்கக் கலந்துரையாடல் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் :
      புதுவையில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பாரதி, பாரதிதாசன் வாழ்ந்த மண்ணில் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தமிழ் என்பது பேசுவதற்கான மொழி மட்டுமல்ல.  உலகில் தற்போதுள்ள மூத்த மொழிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். 6900 மொழிகள் பேசப்படும் மொழிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30 மொழிகள் மட்டுமே கணிசமாக பேசப்படுவது. இவற்றில் கணிசமான மொழிகள் வழக்கில் இல்லை. மாறாதது தமிழ் மட்டுமே. தமிழர்கள் பல்வேறு விஷயங்களை உணர வேண்டும். இன்று வடசொல் ஆதிக்கம் தமிழில் அதிகம் காணப்படுகிறது. தமிழ்ப் பெயர்களையே காண முடிவதில்லை. 1916ல் தோற்றுவிக்கப்பட்ட தனித் தமிழ் இயக்கம் தேவநேயப் பாவாணர், திரு.வி.க போன்ற தமிழ்ப் பற்றாளர்களை உருவாக்கியது. பலர் தங்கள் பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டார்கள். சூரியநாராயண சாஸ்திரி பரிமாற்கலைஞரானார். ராமையா அன்பழகனானார். இதற்கு முக்கிய காரணம் ஜோதிடமும், ஜாதகமும் தான்.
      இன்று ஒரு வார சமஸ்க்ருத வாரம் கொண்டாடப்படுகிறது. அது போல ஒரு நிலைமை தமிழுக்கும் வரலாம். வடநாட்டில் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் அவர்கள் ஹிந்தியில் தான் பேசுகிறார்கள். ஆனால் இங்கு ஆங்கிலத்தில் பேசுகிறோம். பெயர்களில் சமஸ்க்ருதம் உள்ளது. நமது குழந்தைகளுக்கு தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. தமிழ் 3000 ஆண்டு கால பழ்மையான மொழி. ஆனால் இன்றும் பலரும் தவறாகத் தான் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். ஏரிகள் நிரம்பினவா, நிரம்பியதா என்று குழப்பம். இதில் எது சரி எது தவறு என்று பலருக்கும் தெரிவதில்லை. பேரறிஞர் அண்ணா கண்ட இயக்கமே தமிழ் இயக்கம் தான். கட்சியும் அப்படித்தான். ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. தமிழகத்தில் இன்று 140 கட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. காமராசர் காலத்தில் 6000 பள்ளிகள் இருந்தன. ஆனால் இன்று விளம்பரங்களிலும், திரைப்படங்களிலும் பாதிக்கு மேல் ஆங்கிலம் தான். வெளி மாநிலங்களில் தமிழ் படிக்க வாய்ப்பில்லை. நமக்கு மொழிப்பற்று இல்லை.
      டர்பன் நாட்டில் 7 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் தமிழ்ப் பள்ளி இல்லை. இந்தோனேசியாவில் இல்லை. இந்தோனேசியாவில் ஒரு லட்சம் தமிழர்கள் வசித்த போதும் 10,000 என்று தான் கணக்கு காட்டப்படுகிறது. அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள் உண்டு. அருகாமையிலுள்ள ஈழத்தில் கோவிலில் தமிழ் சொல்லித் தருகிறார்கள். 1730யில் திருக்குறள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. 1856-ல் கார்டுவெல் திராவிடம் குறித்து பேசினார். எழுதினர். வெளிநாட்டினர் செய்ததை நாம் செய்யாவிட்டால் எப்படி ?

      ஜோஸ்கா என்றொரு பெயர். ஆணா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை. இன்று குடும்பத்தில் பெரியவர்களையும் வயதானவர்களையும் மதிப்பதில்லை. ராஜேந்திர சோழன் 13 நாடுகளை வென்றான். இன்று தமிழை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பணி நம்முன் நிற்கிறது...


Sunday, 17 September 2017

கி.ரா. 95 - புகைப்படங்கள் - 2

மிழ்ப் படைப்புலகின் மூத்த படைப்பாளியும், கரிசல் இலக்கியத்தின் பிதாமகனுமான திரு.கி.ராஜநாராயணன் அவர்களில் 95-வது பிறந்த நால் விழா 16.09.2017 சனிக்கிழமையன்று புதுச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.






கி.ரா 95 - புகைப்படங்கள் ஒன்று

மிழ்ப் படைப்புலகின் மூத்த படைப்பாளியும், கரிசல் இலக்கியத்தின் பிதாமகனுமான திரு.கி.ராஜநாராயணன் அவர்களில் 95-வது பிறந்த நால் விழா 16.09.2017 சனிக்கிழமையன்று புதுச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.












Sunday, 19 February 2017

6ஆவது குறும்பட ஆவணப்பட விழா

6ஆவது குறும்படத் திருவிழாவில் திரையிடப்பட்ட குறும்படம் ROLL NO 41 - தனியார் பள்ளிகளில் விளையாட்டு வீரனாக விளங்கும் குழந்தைகளுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை என்று சொல்லி கண்ணீர் விட்டு இறுதியில் அரசு பள்ளியில் சேரும் ஒரு மாணவனின் பதிவு .. மிக அருமை .. இந்த படத்தை இயக்கி நடித்த அந்த குட்டிப் பையன் மாஸ்டர் பிராகி .. பாராட்டுக்கள் பிராகி.
6ஆவது குறும்படத் திருவிழாவில் திரையிடப்பட்ட குறும்படம் பனை - பனை மரத்தின் சிறப்பம்சங்களை விளக்கும் அருமையான படம் - பனைக்கென ஒரு அரசுத் துறை இருந்தும் அதன் மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதும் கூறப்படுகிறது .. பட இயக்குனர் திரு.அருண்மொழிவர்மன், கடலூர்..
இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் குறித்த ஒரு ஆவணப்படம் - "இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் (1930-2014) - சொன்னால் நம்ப மாட்டீர்கள் இந்தப் படத்தை தயாரித்தது தமிழ் தெரியாத ஒரு இயக்குனர் - திரு.பிஸ்ட் (M.S.BISHT) பிலிம்ஸ் டிவிஷன் தயார்த்துள்ள படம் - மிக மிக சிறப்பாக இருக்கிறது - மிகவும் அருமையான பதிவு --
பிலிம்ஸ் டிவிஷன் பல்வேறு மிக மிக சிறப்பான ஆவணப்படங்களையும், குறும்படங்களையும் பல்வேறு சிறப்பான இயக்குனர்களைக் கொண்டு தயாரித்து வருகிறது. ஆனால் அவை மக்களைச் சென்றடைய என்ன வழி .. ஆனால் அவசியம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்
கோவையில் நடைபெற்ற 1998 பிப்ரவரி 14 சம்பவங்களை ஒட்டி நடைபெற்ற மதக் கலவரங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட 3 நிமிட குறும்படம் "கர்சீப்" - இன்னும் சற்று ஆழமாக யோசித்து கோவைக் கலவரத்தை அருமையான டாக்குமென்ட்ரி படமா எடுத்திருக்கலாமே என்று தோன்றியது.. இயக்குனர் திரு.ஜி.எம்.சண்முகராஜ்

Saturday, 18 February 2017

18.02.2017 நிகழ்வுகள்
6வது சர்வ்தேச ஆவணப்பட குறும்பட விழாவில் 18.02.2017 அன்று திரையிடப்பட்ட படம் WHERE TO INVADAE NEXT என்கிற படம். அமெரிக்கர் ஒருவர் உலகின் சில நாடுகளுக்கு சென்று அங்குள்ள நிலைமையை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்த்து அமெரிக்காவை விட அந்த நாடுகள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதைக் கண்டு பெருமூச்சு விட்டு நம்மையும்ஆச்சரியப்பட வைக்கிறார் ..குறிப்பாக பின்லாந்து ஜெர்மனி,போர்ச்சுகல், நார்வே, டுனீசியா, ஐஸ்லாந்து நாடுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழா மலரை மாண்புமிகு க்.லட்சுமிநாராயணன் அவர்கள் வெளியிட்டார்.
6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் இயக்குனர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களைப் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. 6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் இயக்குனர் பஞ்சு அருணாசலம் அவர்களைப்பற்றிய டாக்குமெண்ட்ரி திரைப்படம் A CREATOR WITH MIDAS TOUCH திரையிடப்பட்டது. அதன் இயக்குனர் திரு.தனஞ்செயன் மற்றும் எடிட்டர்.திரு.;விக்னேஷ் கெளரவிக்கப்பட்டனர்.
6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் திருமிகு.க.இலட்சுமிநாராயணன், அரசு ஊழியர் சங்கத்தின் கெள்ரவத் தலைவர்.சி.ஹெச்.பாலமோகனன், தோழர்.சு.இராமச்சந்திரன் ...













Thursday, 16 February 2017

புதுச்சேரி குறும்பட ஆவணப்பட விழா - 2017 - பகுதி ஒன்று

6-ஆவது ஆவணப்பட குறும்பட விழா இன்று 16.02.2016 புதுச்சேரி பல்கலைக்கழக ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் இனிமையாக தொடங்கியது. விழாவில் முதல் ஆவணப்படமாக "இறுதி ஊர்வலம்" திரையிடப்பட்டது. இது புதுச்சேரி பல்கலைக் கழக மாணவர்களின் சொந்த தயாரிப்பாகும்.