Wednesday, 5 December 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - விருது வழங்கும் விழா 2018








புதுவைப்பரணி – செய்திகள்
       தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் “விருது வழங்கும் விழா – 2018” - 08.12.2018 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் புதுச்சேரி ஜெயராம் உணவக கருத்தரங்கக் கூடத்தில் நடத்திட உள்ளன.
       விழாவில் திரு.ஆர்.விசுவநாதன் (முன்னாள் அமைச்சர் – புதுச்சேரி), முனைவர்.இரா.காமராசு (பொதுச்செயலாளர், த.க.இ.பெ) திரு.ப.பா.ரமணி (பொருளாளர், த.க.இ.பெ) திரு.அ.மு.சலீம் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
       எழுத்தாளர்.பிரபஞ்சன் சிறப்புரையாற்றுகிறார்.
       விருதுகள் வழங்கி பாராட்டுரை : திரு.;வே.நாராயணசாமி – மாண்புமிகு முதல் அமைச்சர், புதுச்சேரி அரசு.
       விருதாளர்களும் அவர்தம் படைப்புகளும் :
வாழ்நாள் சாதனையாளர் – சிற்பி சக்தி விருது :
தொல்லியல் ஆய்வாளர் செந்தீ நடராசன்
தமிழியல் ஆளுமைக்கான சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விருது :
முனைவர் இராம.சுந்தரம்
ஆய்வு நூல்கள்
பேராசிரியர் நா.வானமாமலை நினைவு விருது :
முனைவர். கே.பழனிவேலு
(தொல்காப்பியத் திணைக் கோட்பாடு, திறனாய்வியல் நோக்கு)
முதுமுனைவர் வ.ஐ.சுப்பிரமணியன் நினைவு விருது :
முனைவர்.சிலம்பு.நா.செல்வராசு
(தொல் தமிழர் திருமண முறை)
கட்டுரை நூல்கள் :
என்.சி.பி.எச். இராதாகிருஷ்ணமூர்த்தி நினைவு விருது :
பேரா.பொ.முத்துக்குமரன் மற்றும் முனைவர்.ம.சாலமன் பெர்னாட்ஷா
(அழிவின் விளிம்பில் அந்தமான்)
மேலவாசல் கோ.இராமசாமி நினைவு விருது :
ராமச்சந்திர வைத்தியநாத்
(சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்)
கவிதை நூல்கள் :
பின்னையூர்.மா.சண்முகம் நினைவு விருது :
தனசக்தி
வாளிப்பற்ற உடல்காரி
கே.சி.எஸ்.அருணாசலம் நினைவு விருது :
சஹானா
(கண் அறியாக்காற்று)
சிறுகதை நூல்கள் :
எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவு விருது :
வி.ஜீவகுமாரன்
(நிர்வாண மனிதர்கள்)
திருமதி.சுந்தரி சாந்திலால் நினைவு விருது :
விஜே
(வாசிக்க மறந்த பக்கங்கள்)
சிறுவர் நூல்கள்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது :
நெல்லை.சு.முத்து
(முத்துவைக் கேளுங்கள்)
எம்.கெளதம் நினைவு விருது :
ஏ.ஆர்.முருகேசன்
(சிந்துவும் வண்ணக்குருவியும்)
நாவல்கள்
அழகியநாயகி அம்மாள் நினைவு விருது :
அண்டனூர் சுரா.
(முத்தன்பள்ளம்)
தென்னமநாடு – இராமசாமி மாரியம்மாள் நினைவு விருது :
சைலபதி
(பெயல்)
மொழிபெயர்ப்பு நூல்கள்
தொ.மு.சி.ரகுநாதன் நினைவு விருது :
ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ்
(குஜராய் – திரைக்குப்பின்னால்)
அறந்தை நாராயணன் நினைவு விருது :
முனைவர்.தி.உமாதேவி
(ராதிகா சாந்தவனம்)
குறும்படங்கள்
தோழர்.பா.முத்துசாமி நினைவு விருது :
அருண் பகத்
(தாகம்)
பவானி பி.என்.பாலு – பாக்கியலட்சுமி நினைவு விருது
புஷ்பநாதன் ஆறுமுகம்
(காவல் தெய்வம்)


Thursday, 6 September 2018

தமுஎகச இலாசுப்பேட்டை கிளை -கலைஞருக்கு புகழாஞ்சலி








முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இலாசுப்பேட்டை கிளை சார்பில் 6.3.2018 அன்று புதுச்சேரி விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் ..
பத்திரிக்கையாளர்.பி.என்.எஸ்.பாண்டியன் :
எமர்ஜென்சி காலத்தில் முரசொலி பத்திரிக்கையில் “அண்ணா சிலைக்கு மாலையணிவிக்க வராதவர்கள்” என்று எண்ணற்ற தோழர்களின் பட்டியலை கலைஞர் அவர்கள் பட்டியலிட்டார். அவர்கள் அனைவரும் சிறையில் இருந்தார்கள்.
“இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்று சொன்னார்.
“முரசொலியில் பெரியார் ஆண்டு என்று பிரசுரித்தார்.
இந்தியாவிலேயே முதன் முதலாக பத்திரிக்கையாளர்களுக்காக “பத்திரிக்கையாளர் நல நிதியம்” அமைத்தவர் அவரே.
அதுபோல இந்தியாவில் பத்திரிக்கையாளர்களுக்காக முதன் முதலில் ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததும் அவரே.
மிகுந்த தாராள மனதோடு சிறு பத்திரிக்கைகளுக்கும் அரசு விளம்பரம் கொடுத்துதவினார்.
தோழர்.எல்லை சிவக்குமார் :
கலைஞர் அவர்கள் தமிழ் திரையுலகை ஆண்டவர்.
திரையுலகோடு அவரது தொடர்பு என்பது 75 ஆண்டுகளாகும். தனது 17ஆவது வயதில் ஈரோடு சென்று குடியரசுபத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றினார். அப்போது கோயமுத்தூரிலிருந்த ஜூபிடர் பிக்சர்ஸ் ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. திரைப்படத்திற்கு கதை எழுதித் தருமாறு சாமி கலைஞரைக் கேட்டுக் கொண்டார். கலைஞர் “என் கொள்கை மற்றும் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டால் அப்பொறுப்பிலிருந்து விலகி விடுவேன்” என்கிற நிபந்தனையுடன் கதை எழுதத் தொடங்கினார். இதற்காக கோவையில் 10 ரூபாய் வாடகையில் வீடு எடுத்துத் தங்கியிருந்து பணியாற்றினார். 1947ல் படம் வெளியானது. குடும்பத்தினருடன் படம் பார்க்க கலைஞர் சென்றிருந்தார். டைட்டில் போடும் போது கதை வசனம் சாமி என்று கார்டு வந்ததும் கலைஞர் கொதித்துப் போனார். கோபத்துடன் திருவாரூர் கிளம்பிச் சென்றார்.
கலைஞர் கதை வசனத்தில் மந்திரி குமாரி முதலில் நாடகமாகத் தான் அரங்கேறியது. பின்னர் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்துப் படமாக தயாரானது. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இது முதல் படம். எம்.ஜி.ஆர் காந்தீய கொள்கைகளில் பிடிப்பு உள்ளவராக இருந்தார். கலைஞர் எப்படியாவது அவரை பெரியாரிய சிந்தனைகளில் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதற்காக நிறையப் புத்தகங்களை எம்.ஜி.ஆருக்குப் படிக்கக் கொடுத்தார். எப்படியாவது கலைஞரை காந்தீய சிந்தனைகளில் கொண்டு வந்து விட வேண்டும் என் எம்.ஜி.ஆர் முயற்சித்தார். இறுதியில் கலைஞர் வென்றார்.
தமிழை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உயர்வானதாக மாற்றிய பெருமை கலைஞர் அவர்களையே சாரும்.
நீங்கள் கதை வசனம் எழுதிய படங்களிலேயே உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேட்ட போது பலரும் அவர் பராசக்தி என்று சொல்வார் என்று தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் சொன்ன பதில் “நாம்”. நான் மனம் உருகி கதை வசனம் எழுதிய படம் என்று சொல்லி மகிழ்ந்தார். அந்தப் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் மார்க்சீய சித்தாந்தத்தை நம்மால் காண முடியும். அதில் ஒரு வசனம் “ ஒவ்வொரு கேள்விக் குறியும் அரிவாள் சுத்தியலாக மாறும்”
தோழர்.ஜே.கிருஷ்ணமூர்த்தி :
கலைஞர் அவர்கள் தான் பிற்பட்டவர்களுக்காக தனி அமைச்சகத்தை இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கினார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு ஏ.வரதராஜன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட அரும்பணியாற்றினார்.
கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பணியாற்ற வாய்ப்பளிக்கும் சட்டத்தை 1970ல் கொண்டு வந்தார். அதற்கான அரசு பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு ஆகம விதிகள், வேதங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
ஒரு முறை எதிர்க்கட்சி தலைவராக இருந்த திரு.ஹெச்.வி.ஹண்டே அவர்கள் கலைஞரின் ஆட்சியை “மூன்றாம் தர ஆட்சி” என்று சொன்னார். அதற்கு கலைஞர் அவர்கள் “தவறு. இது நான்காம் தர ஆட்சி. அதாவது சூத்திரர்களின் ஆட்சி” என்று சொன்னார்.
திருநங்ககைகளுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கியதோடு தனியே நல வாரியம் அமைத்தார்.
குறிப்பாக இஸ்லாமியர்களின் நண்பர் என்று கலைஞர் அவர்களைச் சொல்லலாம். ஹனீபா பாடல் இல்லாத தி.மு.க மேடையே கிடையாது.
தி.நகரில் இஸ்லாமிய நண்பர்கள் தொழுகை செய்யும் பகுதிக்கு அருகே ஒரு விநாயகர் திடீரென்று முளைத்த போது அதை உடனே அகற்ற ஏற்பாடு செய்தவர் கலைஞர் அவர்கள்.
தோழர்.தி.கோவிந்தராசு :
எந்த அரசியல் தலைவரும் கலைஞரின் உயரத்தை எட்டவில்லை. அரசியலில் தொய்வு வருகிற போது இளைப்பாறுகிற மேடையாக இலக்கியத்தை கலைஞர் எண்ணினார். தமிழகத்தில் விதவை பொட்டு வைத்துக் கொள்ள முடியாது என்று சொன்ன போது ஏன் முடியாது கைம்பெண் என்று சொல்லிப் பாருங்கள் இரண்டு பொட்டு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
சிலப்பதிகாரத்திற்காக பூம்புகாரில் நிலாச்சோறு போட்டு விழா நடத்தினார்.
கலைஞர் எழுதிய நூல்களை அடுக்கினால் அவர் உருவத்தைப் போல மூன்று மடங்கு வரும் என்று கவிஞர்.வைரமுத்து சொன்னார்.
கலைஞரின் கடிதங்கள் 20,000 க்கும் மேலே இருக்கும். அது 13 தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது.
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை கவிதை வடிவில் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கியவர்.
பிடரல் காஸ்ட்ரோவைப் பற்றி தமிழில் கவிதை எழுதி அதை அனுப்பி வைதார். அந்த கவிதை கியூபாவில் படிக்கப்பட்டு காஸ்ட்ரோவின் மேஜையை அலங்கரித்தது.

Saturday, 13 January 2018

சமூக நல்லிணக்க பொங்கல் ...

புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கத்தின் சார்பில் இன்று 13.1.2018 மாலை புதுச்சேரி இலாசுப்பேட்டையில் சமூக நல்லிணக்க பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மறைதிரு.அந்தோணிசாமி அடிகளார், திரு.எம்.அப்துல் ஹமீது, பேரா.நா.இளங்கோ கலந்து கொண்டனர். பேரா.லெனின் தங்கப்பா, சி.எச்.பாலமோகனன், கலந்து கொண்டனர் ...







சமூக நல்லிணக்க பொங்கள் .. 13.1.2018

புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கத்தின் சார்பில் இன்று 13.1.2018 மாலை புதுச்சேரி இலாசுப்பேட்டையில் சமூக நல்லிணக்க பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மறைதிரு.அந்தோணிசாமி அடிகளார், திரு.எம்.அப்துல் ஹமீது, பேரா.நா.இளங்கோ கலந்து கொண்டனர். பேரா.லெனின் தங்கப்பா, சி.எச்.பாலமோகனன், கலந்து கொண்டனர் ...