Wednesday, 5 December 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - விருது வழங்கும் விழா 2018








புதுவைப்பரணி – செய்திகள்
       தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் “விருது வழங்கும் விழா – 2018” - 08.12.2018 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் புதுச்சேரி ஜெயராம் உணவக கருத்தரங்கக் கூடத்தில் நடத்திட உள்ளன.
       விழாவில் திரு.ஆர்.விசுவநாதன் (முன்னாள் அமைச்சர் – புதுச்சேரி), முனைவர்.இரா.காமராசு (பொதுச்செயலாளர், த.க.இ.பெ) திரு.ப.பா.ரமணி (பொருளாளர், த.க.இ.பெ) திரு.அ.மு.சலீம் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
       எழுத்தாளர்.பிரபஞ்சன் சிறப்புரையாற்றுகிறார்.
       விருதுகள் வழங்கி பாராட்டுரை : திரு.;வே.நாராயணசாமி – மாண்புமிகு முதல் அமைச்சர், புதுச்சேரி அரசு.
       விருதாளர்களும் அவர்தம் படைப்புகளும் :
வாழ்நாள் சாதனையாளர் – சிற்பி சக்தி விருது :
தொல்லியல் ஆய்வாளர் செந்தீ நடராசன்
தமிழியல் ஆளுமைக்கான சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விருது :
முனைவர் இராம.சுந்தரம்
ஆய்வு நூல்கள்
பேராசிரியர் நா.வானமாமலை நினைவு விருது :
முனைவர். கே.பழனிவேலு
(தொல்காப்பியத் திணைக் கோட்பாடு, திறனாய்வியல் நோக்கு)
முதுமுனைவர் வ.ஐ.சுப்பிரமணியன் நினைவு விருது :
முனைவர்.சிலம்பு.நா.செல்வராசு
(தொல் தமிழர் திருமண முறை)
கட்டுரை நூல்கள் :
என்.சி.பி.எச். இராதாகிருஷ்ணமூர்த்தி நினைவு விருது :
பேரா.பொ.முத்துக்குமரன் மற்றும் முனைவர்.ம.சாலமன் பெர்னாட்ஷா
(அழிவின் விளிம்பில் அந்தமான்)
மேலவாசல் கோ.இராமசாமி நினைவு விருது :
ராமச்சந்திர வைத்தியநாத்
(சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்)
கவிதை நூல்கள் :
பின்னையூர்.மா.சண்முகம் நினைவு விருது :
தனசக்தி
வாளிப்பற்ற உடல்காரி
கே.சி.எஸ்.அருணாசலம் நினைவு விருது :
சஹானா
(கண் அறியாக்காற்று)
சிறுகதை நூல்கள் :
எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவு விருது :
வி.ஜீவகுமாரன்
(நிர்வாண மனிதர்கள்)
திருமதி.சுந்தரி சாந்திலால் நினைவு விருது :
விஜே
(வாசிக்க மறந்த பக்கங்கள்)
சிறுவர் நூல்கள்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது :
நெல்லை.சு.முத்து
(முத்துவைக் கேளுங்கள்)
எம்.கெளதம் நினைவு விருது :
ஏ.ஆர்.முருகேசன்
(சிந்துவும் வண்ணக்குருவியும்)
நாவல்கள்
அழகியநாயகி அம்மாள் நினைவு விருது :
அண்டனூர் சுரா.
(முத்தன்பள்ளம்)
தென்னமநாடு – இராமசாமி மாரியம்மாள் நினைவு விருது :
சைலபதி
(பெயல்)
மொழிபெயர்ப்பு நூல்கள்
தொ.மு.சி.ரகுநாதன் நினைவு விருது :
ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ்
(குஜராய் – திரைக்குப்பின்னால்)
அறந்தை நாராயணன் நினைவு விருது :
முனைவர்.தி.உமாதேவி
(ராதிகா சாந்தவனம்)
குறும்படங்கள்
தோழர்.பா.முத்துசாமி நினைவு விருது :
அருண் பகத்
(தாகம்)
பவானி பி.என்.பாலு – பாக்கியலட்சுமி நினைவு விருது
புஷ்பநாதன் ஆறுமுகம்
(காவல் தெய்வம்)


Thursday, 6 September 2018

தமுஎகச இலாசுப்பேட்டை கிளை -கலைஞருக்கு புகழாஞ்சலி








முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இலாசுப்பேட்டை கிளை சார்பில் 6.3.2018 அன்று புதுச்சேரி விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் ..
பத்திரிக்கையாளர்.பி.என்.எஸ்.பாண்டியன் :
எமர்ஜென்சி காலத்தில் முரசொலி பத்திரிக்கையில் “அண்ணா சிலைக்கு மாலையணிவிக்க வராதவர்கள்” என்று எண்ணற்ற தோழர்களின் பட்டியலை கலைஞர் அவர்கள் பட்டியலிட்டார். அவர்கள் அனைவரும் சிறையில் இருந்தார்கள்.
“இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்று சொன்னார்.
“முரசொலியில் பெரியார் ஆண்டு என்று பிரசுரித்தார்.
இந்தியாவிலேயே முதன் முதலாக பத்திரிக்கையாளர்களுக்காக “பத்திரிக்கையாளர் நல நிதியம்” அமைத்தவர் அவரே.
அதுபோல இந்தியாவில் பத்திரிக்கையாளர்களுக்காக முதன் முதலில் ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததும் அவரே.
மிகுந்த தாராள மனதோடு சிறு பத்திரிக்கைகளுக்கும் அரசு விளம்பரம் கொடுத்துதவினார்.
தோழர்.எல்லை சிவக்குமார் :
கலைஞர் அவர்கள் தமிழ் திரையுலகை ஆண்டவர்.
திரையுலகோடு அவரது தொடர்பு என்பது 75 ஆண்டுகளாகும். தனது 17ஆவது வயதில் ஈரோடு சென்று குடியரசுபத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றினார். அப்போது கோயமுத்தூரிலிருந்த ஜூபிடர் பிக்சர்ஸ் ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. திரைப்படத்திற்கு கதை எழுதித் தருமாறு சாமி கலைஞரைக் கேட்டுக் கொண்டார். கலைஞர் “என் கொள்கை மற்றும் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டால் அப்பொறுப்பிலிருந்து விலகி விடுவேன்” என்கிற நிபந்தனையுடன் கதை எழுதத் தொடங்கினார். இதற்காக கோவையில் 10 ரூபாய் வாடகையில் வீடு எடுத்துத் தங்கியிருந்து பணியாற்றினார். 1947ல் படம் வெளியானது. குடும்பத்தினருடன் படம் பார்க்க கலைஞர் சென்றிருந்தார். டைட்டில் போடும் போது கதை வசனம் சாமி என்று கார்டு வந்ததும் கலைஞர் கொதித்துப் போனார். கோபத்துடன் திருவாரூர் கிளம்பிச் சென்றார்.
கலைஞர் கதை வசனத்தில் மந்திரி குமாரி முதலில் நாடகமாகத் தான் அரங்கேறியது. பின்னர் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்துப் படமாக தயாரானது. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இது முதல் படம். எம்.ஜி.ஆர் காந்தீய கொள்கைகளில் பிடிப்பு உள்ளவராக இருந்தார். கலைஞர் எப்படியாவது அவரை பெரியாரிய சிந்தனைகளில் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதற்காக நிறையப் புத்தகங்களை எம்.ஜி.ஆருக்குப் படிக்கக் கொடுத்தார். எப்படியாவது கலைஞரை காந்தீய சிந்தனைகளில் கொண்டு வந்து விட வேண்டும் என் எம்.ஜி.ஆர் முயற்சித்தார். இறுதியில் கலைஞர் வென்றார்.
தமிழை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உயர்வானதாக மாற்றிய பெருமை கலைஞர் அவர்களையே சாரும்.
நீங்கள் கதை வசனம் எழுதிய படங்களிலேயே உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேட்ட போது பலரும் அவர் பராசக்தி என்று சொல்வார் என்று தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் சொன்ன பதில் “நாம்”. நான் மனம் உருகி கதை வசனம் எழுதிய படம் என்று சொல்லி மகிழ்ந்தார். அந்தப் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் மார்க்சீய சித்தாந்தத்தை நம்மால் காண முடியும். அதில் ஒரு வசனம் “ ஒவ்வொரு கேள்விக் குறியும் அரிவாள் சுத்தியலாக மாறும்”
தோழர்.ஜே.கிருஷ்ணமூர்த்தி :
கலைஞர் அவர்கள் தான் பிற்பட்டவர்களுக்காக தனி அமைச்சகத்தை இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கினார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு ஏ.வரதராஜன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட அரும்பணியாற்றினார்.
கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பணியாற்ற வாய்ப்பளிக்கும் சட்டத்தை 1970ல் கொண்டு வந்தார். அதற்கான அரசு பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு ஆகம விதிகள், வேதங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
ஒரு முறை எதிர்க்கட்சி தலைவராக இருந்த திரு.ஹெச்.வி.ஹண்டே அவர்கள் கலைஞரின் ஆட்சியை “மூன்றாம் தர ஆட்சி” என்று சொன்னார். அதற்கு கலைஞர் அவர்கள் “தவறு. இது நான்காம் தர ஆட்சி. அதாவது சூத்திரர்களின் ஆட்சி” என்று சொன்னார்.
திருநங்ககைகளுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கியதோடு தனியே நல வாரியம் அமைத்தார்.
குறிப்பாக இஸ்லாமியர்களின் நண்பர் என்று கலைஞர் அவர்களைச் சொல்லலாம். ஹனீபா பாடல் இல்லாத தி.மு.க மேடையே கிடையாது.
தி.நகரில் இஸ்லாமிய நண்பர்கள் தொழுகை செய்யும் பகுதிக்கு அருகே ஒரு விநாயகர் திடீரென்று முளைத்த போது அதை உடனே அகற்ற ஏற்பாடு செய்தவர் கலைஞர் அவர்கள்.
தோழர்.தி.கோவிந்தராசு :
எந்த அரசியல் தலைவரும் கலைஞரின் உயரத்தை எட்டவில்லை. அரசியலில் தொய்வு வருகிற போது இளைப்பாறுகிற மேடையாக இலக்கியத்தை கலைஞர் எண்ணினார். தமிழகத்தில் விதவை பொட்டு வைத்துக் கொள்ள முடியாது என்று சொன்ன போது ஏன் முடியாது கைம்பெண் என்று சொல்லிப் பாருங்கள் இரண்டு பொட்டு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
சிலப்பதிகாரத்திற்காக பூம்புகாரில் நிலாச்சோறு போட்டு விழா நடத்தினார்.
கலைஞர் எழுதிய நூல்களை அடுக்கினால் அவர் உருவத்தைப் போல மூன்று மடங்கு வரும் என்று கவிஞர்.வைரமுத்து சொன்னார்.
கலைஞரின் கடிதங்கள் 20,000 க்கும் மேலே இருக்கும். அது 13 தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது.
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை கவிதை வடிவில் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கியவர்.
பிடரல் காஸ்ட்ரோவைப் பற்றி தமிழில் கவிதை எழுதி அதை அனுப்பி வைதார். அந்த கவிதை கியூபாவில் படிக்கப்பட்டு காஸ்ட்ரோவின் மேஜையை அலங்கரித்தது.

Saturday, 13 January 2018

சமூக நல்லிணக்க பொங்கல் ...

புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கத்தின் சார்பில் இன்று 13.1.2018 மாலை புதுச்சேரி இலாசுப்பேட்டையில் சமூக நல்லிணக்க பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மறைதிரு.அந்தோணிசாமி அடிகளார், திரு.எம்.அப்துல் ஹமீது, பேரா.நா.இளங்கோ கலந்து கொண்டனர். பேரா.லெனின் தங்கப்பா, சி.எச்.பாலமோகனன், கலந்து கொண்டனர் ...







சமூக நல்லிணக்க பொங்கள் .. 13.1.2018

புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கத்தின் சார்பில் இன்று 13.1.2018 மாலை புதுச்சேரி இலாசுப்பேட்டையில் சமூக நல்லிணக்க பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மறைதிரு.அந்தோணிசாமி அடிகளார், திரு.எம்.அப்துல் ஹமீது, பேரா.நா.இளங்கோ கலந்து கொண்டனர். பேரா.லெனின் தங்கப்பா, சி.எச்.பாலமோகனன், கலந்து கொண்டனர் ...













Friday, 15 December 2017

திரு.கோ.விஸ்வநாதன் அவர்களின் உரை ..

வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.கோ.விஸ்வநாதன் புதுச்சேரியில் 12.12.2017 அன்று நடைபெற்ற தமிழியக்கம் அமைப்பு உருவாக்கக் கலந்துரையாடல் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் :
      புதுவையில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பாரதி, பாரதிதாசன் வாழ்ந்த மண்ணில் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தமிழ் என்பது பேசுவதற்கான மொழி மட்டுமல்ல.  உலகில் தற்போதுள்ள மூத்த மொழிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். 6900 மொழிகள் பேசப்படும் மொழிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30 மொழிகள் மட்டுமே கணிசமாக பேசப்படுவது. இவற்றில் கணிசமான மொழிகள் வழக்கில் இல்லை. மாறாதது தமிழ் மட்டுமே. தமிழர்கள் பல்வேறு விஷயங்களை உணர வேண்டும். இன்று வடசொல் ஆதிக்கம் தமிழில் அதிகம் காணப்படுகிறது. தமிழ்ப் பெயர்களையே காண முடிவதில்லை. 1916ல் தோற்றுவிக்கப்பட்ட தனித் தமிழ் இயக்கம் தேவநேயப் பாவாணர், திரு.வி.க போன்ற தமிழ்ப் பற்றாளர்களை உருவாக்கியது. பலர் தங்கள் பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டார்கள். சூரியநாராயண சாஸ்திரி பரிமாற்கலைஞரானார். ராமையா அன்பழகனானார். இதற்கு முக்கிய காரணம் ஜோதிடமும், ஜாதகமும் தான்.
      இன்று ஒரு வார சமஸ்க்ருத வாரம் கொண்டாடப்படுகிறது. அது போல ஒரு நிலைமை தமிழுக்கும் வரலாம். வடநாட்டில் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் அவர்கள் ஹிந்தியில் தான் பேசுகிறார்கள். ஆனால் இங்கு ஆங்கிலத்தில் பேசுகிறோம். பெயர்களில் சமஸ்க்ருதம் உள்ளது. நமது குழந்தைகளுக்கு தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. தமிழ் 3000 ஆண்டு கால பழ்மையான மொழி. ஆனால் இன்றும் பலரும் தவறாகத் தான் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். ஏரிகள் நிரம்பினவா, நிரம்பியதா என்று குழப்பம். இதில் எது சரி எது தவறு என்று பலருக்கும் தெரிவதில்லை. பேரறிஞர் அண்ணா கண்ட இயக்கமே தமிழ் இயக்கம் தான். கட்சியும் அப்படித்தான். ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. தமிழகத்தில் இன்று 140 கட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. காமராசர் காலத்தில் 6000 பள்ளிகள் இருந்தன. ஆனால் இன்று விளம்பரங்களிலும், திரைப்படங்களிலும் பாதிக்கு மேல் ஆங்கிலம் தான். வெளி மாநிலங்களில் தமிழ் படிக்க வாய்ப்பில்லை. நமக்கு மொழிப்பற்று இல்லை.
      டர்பன் நாட்டில் 7 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் தமிழ்ப் பள்ளி இல்லை. இந்தோனேசியாவில் இல்லை. இந்தோனேசியாவில் ஒரு லட்சம் தமிழர்கள் வசித்த போதும் 10,000 என்று தான் கணக்கு காட்டப்படுகிறது. அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள் உண்டு. அருகாமையிலுள்ள ஈழத்தில் கோவிலில் தமிழ் சொல்லித் தருகிறார்கள். 1730யில் திருக்குறள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. 1856-ல் கார்டுவெல் திராவிடம் குறித்து பேசினார். எழுதினர். வெளிநாட்டினர் செய்ததை நாம் செய்யாவிட்டால் எப்படி ?

      ஜோஸ்கா என்றொரு பெயர். ஆணா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை. இன்று குடும்பத்தில் பெரியவர்களையும் வயதானவர்களையும் மதிப்பதில்லை. ராஜேந்திர சோழன் 13 நாடுகளை வென்றான். இன்று தமிழை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பணி நம்முன் நிற்கிறது...


Sunday, 17 September 2017

கி.ரா. 95 - புகைப்படங்கள் - 2

மிழ்ப் படைப்புலகின் மூத்த படைப்பாளியும், கரிசல் இலக்கியத்தின் பிதாமகனுமான திரு.கி.ராஜநாராயணன் அவர்களில் 95-வது பிறந்த நால் விழா 16.09.2017 சனிக்கிழமையன்று புதுச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.






கி.ரா 95 - புகைப்படங்கள் ஒன்று

மிழ்ப் படைப்புலகின் மூத்த படைப்பாளியும், கரிசல் இலக்கியத்தின் பிதாமகனுமான திரு.கி.ராஜநாராயணன் அவர்களில் 95-வது பிறந்த நால் விழா 16.09.2017 சனிக்கிழமையன்று புதுச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.