Sunday, 6 September 2015

ஸ்ரீ வில்லிப்புத்தூர் திருமதி.கே.விஜயலட்சுமியின் இசைக் கச்சேரி -

இன்று (06.09.2015) ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் ஒரு இசைக்கச்சேரியை அழைப்பின் பேரில் புதுச்சேரி அரவிந்தர் வீதியிலுள்ள பரத கலாமண்டலத்தில் பார்க்க நேர்ந்தது.
ஒரு இசைக்கச்சேரி - ஸ்ரீவில்லிப்புத்தூர் திருமதி.கே.விஜயலட்சுமி பாட்டுக்கு கோயமுத்தூர் எஸ்.உஷா வயலின் இசைக்க மிருதங்கம் வித்வான் எஸ்.கோவிந்தராஜன். தனி ஆவர்த்தனம் மிகவும் ரசிக்கப்படும்படியாக அமைந்திருந்தது.
நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கசக்கி பிழியும் கடுமையான பணிகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி மனதுக்கு ஆறுதலாகவும் உற்சாகமூட்டக் கூடியதாகவும் இருந்தது.
அரங்க மேடை அமைப்பும், ஒலி, ஒளி அமைப்பும் மிகவும் பிரமாதம்.
இது போல் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என்கிற தகவலை பரவலாக கொண்டு சேர்க்க வேண்டும். அது குறித்து நிர்வாகிகள் ஆலோசித்து செயல்படட்டும்.
பல கலைஞர்கள் பாராட்டை மிகவும் விரும்புகிறார்கள். தங்கள் திறமை திசையெட்டும் பரவ வேண்டும் ஆசைப்படுகிறார்கள். இது நியாயமானதும் கூட. ஏனென்றால் பாராட்டுக்கள் தான் அவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய பரிசு.
வாழ்த்துக்கள் தொடரட்டும் திருமதி.கே.விஜயலட்சுமி குழுவினரின் வெற்றிப்பயணம் ...





No comments:

Post a Comment