Friday, 30 October 2015

புதுச்சேரியில் தி ஹிந்து நாளிதழ் 3ம் ஆண்டு தொடக்க விழா

தமிழ் கூறும் நல்லுலகில் உண்மை பேசும், தமிழனை ஒரு படி உயர்த்திச் செல்லும் ஒரு பத்திரிக்கை இல்லையே என்கிற ஒரு குறையை ஓரளவுக்கு தீர்த்து வைத்துவரும் பத்திரிக்கை "தி ஹிந்து" (தமிழ்) .. தி ஹிந்து இரண்டாண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் காலடி வைத்திருக்கிறது. அதனையொட்டி தமிழகம் முழுவதும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அறிஞர் பெருமக்களை அழைத்து பேச வைத்து அழகு பார்க்கிறது. நாளை புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கம்பன் கலையரங்கில் காலை 9.30 மணி முதல் 1 மணி வரை நிகழ்வு நடைபெற உள்ளது. விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், நடிகர்.பார்த்திபன், எழுத்தாளர்.ஆயிஷா நடராஜன், நாடக இயக்குநர். வேலு சரவணன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். அப்புறம் நானும் நீங்களும். மேலும் தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள பல்வேறு புத்தங்கங்களும் கிடைக்கும். தீபாவளி மலரும் கிடைக்கும். மதியம் உணவும் உண்டு என்று சொல்லி இருக்கிறார்கள். நாளைய காலைப் பொழுதை நமக்காக குரல் கொடுக்கும் ஹிந்துவுக்காக ஒதுக்குவோம்.


Tuesday, 13 October 2015

அறிவுச்சுரங்கம் முனைவர் த.பரசுராமன் மறைவு - அஞ்சலி

அறிவுச்சுரங்கம் முனைவர் த.பரசுராமன் மறைவு - அஞ்சலி
      புதுவைப்பரணி இருமாத இலக்கிய இதழின் துணை ஆசிரியரும், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கம் புதுச்சேரி மாவட்டத் தலைவரும், புதுவை அறிவியல் இயக்கத்தின் நிர்வாகியும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முனவருமாகிய அருமை நண்பர் தோழர்.முனைவர் த.பரசுராமன் இன்று 14.10.2015 - புதங்கிழமை காலை மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அறிவுச்சுரங்கம் முனைவர்.த.பரசுராமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாததாகும். அவரின் இடத்தில் இன்னொருவரை பொருத்திப் பார்க்கக் கூட முடியவில்லை. தமிழை உலகிற்கெல்லாம் கொண்டு சென்றவர். பல ஆளுநர்களுக்கும், வடநாட்டுக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டினருக்கும் தமிழ் கற்றுத் தந்தவர். புதுவைப்பரணியின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவர். இனி இது போல ஒரு நண்பரை தோழரை எங்கு காண்பேன் .... ?