Friday, 30 October 2015

புதுச்சேரியில் தி ஹிந்து நாளிதழ் 3ம் ஆண்டு தொடக்க விழா

தமிழ் கூறும் நல்லுலகில் உண்மை பேசும், தமிழனை ஒரு படி உயர்த்திச் செல்லும் ஒரு பத்திரிக்கை இல்லையே என்கிற ஒரு குறையை ஓரளவுக்கு தீர்த்து வைத்துவரும் பத்திரிக்கை "தி ஹிந்து" (தமிழ்) .. தி ஹிந்து இரண்டாண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் காலடி வைத்திருக்கிறது. அதனையொட்டி தமிழகம் முழுவதும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அறிஞர் பெருமக்களை அழைத்து பேச வைத்து அழகு பார்க்கிறது. நாளை புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கம்பன் கலையரங்கில் காலை 9.30 மணி முதல் 1 மணி வரை நிகழ்வு நடைபெற உள்ளது. விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், நடிகர்.பார்த்திபன், எழுத்தாளர்.ஆயிஷா நடராஜன், நாடக இயக்குநர். வேலு சரவணன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். அப்புறம் நானும் நீங்களும். மேலும் தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள பல்வேறு புத்தங்கங்களும் கிடைக்கும். தீபாவளி மலரும் கிடைக்கும். மதியம் உணவும் உண்டு என்று சொல்லி இருக்கிறார்கள். நாளைய காலைப் பொழுதை நமக்காக குரல் கொடுக்கும் ஹிந்துவுக்காக ஒதுக்குவோம்.


No comments:

Post a Comment