Saturday, 21 November 2015

மருத்துவ நண்ணுயிரியியல் தேசிய மாநாடு

செய்தி வெளியீடு

ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் 25-முதல் 29-ஆம் நவம்பர் 2015 வரை

MICROCON 2015, மருத்துவ நுண்ணுயிரியல் இந்தியன் அசோசியேஷன் இன்

39 வது தேசிய மாநாடு நடத்தப்படுகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு,

1995 ல் ஜிப்மரில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மீண்டும்

பாண்டிச்சேரில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளும் கூட்டாக

இணைந்து இந்த மாநாட்டிற்கு ஜிப்மரில் ஏற்பாடு செய்துள்ளனர்.

மாநாட்டின் கருப்பொருள் "மேன் வெர்சஸ் நுண்ணுயிர்: வேற்றி

பெறபோவது யார் ". மாநாட்டின் போது நுண்ணுயிர் பரிணாம வளர்ச்சி

தாக்கங்கள், நுண்ணுயிர் எதிர்ப்புத் தடுப்பு போக்குகள், தொற்று நோய்

கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள், தொற்று நோய் கட்டுப்பாடு

நடைமுறைகள், மேம்பட்ட மூலக்கூறு தொழில்நுட்பம் மற்றும் உயிர்

தகவலியல் பயன்பாடு, மற்றும் ஆக்கபூர்வமான நோய் விபரவியல்

கருவிகள் குறித்து கருத்து பகிர்வு நடைபெறும்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 1300 பிரதிநிதிகள்

இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். நாடு முழுவதும் உள்ள நுண்ணுயிரியல்

துறையை சேர்ந்தவர்கள் அவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி

அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இந்த மாநாடு ஒரு நல்ல வாய்ப்பாக

இருக்கும். இந்த மாநாட்டில் நுண்ணுயிரியல் துறையின் தற்போதைய

ஆராய்ச்சி நடவடிக்கைகள் விவரிக்கபடும். இந்த மாநாட்டின் ஒரு

பகுதியாக, நுண்ணுயிரியல் துறையை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு

நோயறிதல் நுட்பங்கள் மற்றும் பொருள்விளக்கும் திறன்கள் குறித்து பயிற்சி

இந்த மாநாட்டை டாக்டர் எம்.கே. பன், திறந்து வைப்பார். 25, 26

நவம்பர் 2015 அன்று, இந்த துறையை சேர்ந்த மாணவர்களுக்கு மொத்தம்

14 தொடர் மருத்துவ கல்வி (CME) திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டின் போது, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிரதிநிதிகள், 197

வாய்வழி மற்றும் 486 சுவரொட்டி விளக்கக்காட்சிகளை விவரிப்பர்.

மாநாட்டின் மூன்று நாட்களும் 8 இணை அறிவியல் அமர்வுகள் ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது. நான்கு விருதுகளை பல்வேறு பிரிவுகள் கீழ் சிறந்த

வாய்வழி விளக்க உரையாற்றியவர்களுக்கு வழங்கப்படும் மற்றும் இரண்டு

விருதுகள் சிறந்த சுவரொட்டி விளக்க உரையாற்றியவர்களுக்கு

வழங்கப்படும். இது தவிர, டாக்டர் கே.பி. சர்மா நினைவு IAMM ஜூனியர்

சிறந்த பேப்பர் விருது, IAMM ஜனாதிபதி பேருரை விருது, டாக்டர் எஸ் சி

அகர்வால் பேருரை விருது, IAMM எந்‌டொமென்ட் பேருரை விருது மற்றும்

டாக்டர் யூசி சதுர்வேதி வாழ்நாள் சாதனையாளர் விருது, மாநாட்டின் போது

வழங்கப்படும்.

No comments:

Post a Comment