Tuesday, 23 February 2016

படித்ததில் பிடித்தது - "நீல நிலாவிலிருந்து "

படித்ததில் பிடித்தது …
       துளிப்பாக்கள் …
-    இராமன் சந்தேகித்தான்
விவாகரத்து செய்தாள்
நவீன சீதை
-    பொன்.குமார் – 9003344742

-    “ஜங்க்” உணவு
“யங்” கனவு
இளமையில் சங்கு
-எல்.பிரைட்

ஆவணப்படுத்துங்கள்
ஆகாய மழையை
நாளைக்குக் காட்ட
-    எல்.பிரைட் – 96980 57309

ஒத்தி வைக்கப்பட்டது
ஓயாத அமளியால்
சத்த மன்றம்
_ கூரா.அம்மாசையப்பன் – செல் 97900 01558 –

பாவம் மனித நெரிசலில்
சிக்கித் தவிக்கும்
வாகனங்கள்
-    ந.முருகன்

-    -நன்றி : நீல நிலா – செண்பகராஜன் – 94880 01251 

Sunday, 14 February 2016

ஆவணப்பட குறும்பட விழா நிறைவு விழா

கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த 5வது புதுச்சேரி சர்வதேச ஆவணப்பட குறும்பட விழா இன்று 14.02.2016 மாலை இனிதே நிறைவு பெற்றது.



Friday, 12 February 2016

YOUNG SYRIAN LENSES - DOCUMENTARY FILM

குறும்படங்கள் - ஆவணப்படங்கள் குறித்த பார்வை
YOUNG SYRIAN LENSES
52 MINUTES / FILIPO BIAGIANTI, RUBEN LAGATTOLLA AND ENEA DISCEPOLI / ITALY
சிரியாவில் என்ன நடக்கிறது என்பதை வெளி உலகுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட ஆவணப்படம் - குண்டுகள் பேரல் பேரல்களாக வானிலிருந்து கொட்டப்படுகின்றன. சாவு பற்றிய செய்தி இல்லாத நாளே கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊடக நண்பர்கள் எப்படி மக்களுக்காக களப்பணியாற்றுகிறார்கள் என்பதைக் காட்டும் படம். உயிரை கையில் பணயம் வைத்து எடுத்தமைக்காக இயக்குனர் குழுவிற்கு மனதார சபாஷ் போடலாம். குண்டு மழை பொழிந்தாலும் பள்ளி நடப்பது, மாணவர்கள் கால்பந்து விளையாடுவது என்று மனதை சிலிர்க்க வைக்கும் காட்சிகளும் உண்டு ..







5-வது புதுச்சேரி சர்வதேச குறும்படம் மற்றும் ஆவணப்படத் திருவிழா – 11-14 பிப்ரவரி 2016 தொடக்க விழா

5-வது புதுச்சேரி சர்வதேச குறும்படம் மற்றும் ஆவணப்படத் திருவிழா – 11-14 பிப்ரவரி 2016

தொடக்க விழாவில் விருந்தினர்களின் உரைகள் :










பேரா.சென்னுபதி கே.ராமையா (DEAN – SCHOOL OF MEDIA AND COMMUNICATIONS, PONDICHERRY UNIVERSITY):
       இந்த விழாவின் மூலம் மாணவர்கள் ஊடகம் குறித்த தங்களது ஆற்றலை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். திரையிடுதலில் அனலாக் சகாப்தம் முடிந்து  தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பம் புகுந்துள்ளது. சொல்ல வேண்டிய கருத்து மிக மிக முக்கியமானது. தற்போது தான் எங்கள் மாணவர்கள் ஹைதராபாத் கல்விச்சுற்றுலா சென்று வந்துள்ளார்கள். பல ஸ்டுடியோக்களுக்கும் சென்று வந்துள்ளார்கள். துறைத் தலைவர் பேராசிரியர் திரு.அன்புச்செல்வம் அவர்கள் மிக சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் பணியாற்றி வருகிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரா.அனிஷா பி.கான் (துணை வேந்தர் – பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்) :
       திரைப்படங்கள் நமக்கு தளர்வினைக் கொடுக்கக் கூடியன. ஆனால் எல்லாத் திரைப்படங்களும் அந்த பணியினைச் செய்வதில்லை. ஆனால் குறும்படங்கள் பல்வேறு விஷயங்களை ஆழமாக ஆராய்கின்றன. இங்கு சிரியா நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட இருப்பதாகச் சொன்னார்கள். மக்களின் கஷ்டங்களை அந்த ஆவணப்படம் காட்டுவதாகச் சொன்னார்கள். உலகில் நடைபெறும் பல்வேறு விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று எல்லாமே உள்ளங்கையில் உள்ளது. இந்த விழாவிலிருந்து பல தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த திரையிடல் நமது பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மாணவர்கள் ஆவணப்படங்களை உருவாக்க வேண்டும்.

தோழர்.ச.தமிழ்ச்செல்வன்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் :
       கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விழா நடத்தப்பட்டாலும் இது வரை எந்த துணை வேந்தரும் தொடக்க விழாவில் பங்கேற்றதில்லை. இந்த முறை துணை வேந்தர் பங்கேற்றது எங்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. குறும்படங்களையும், ஆவணப்படங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தற்போது குறும்படங்களைப் பார்ப்பது ஒரு பண்பாடாகி வருகிறது. குறிப்பாக சென்னையில் கோடம்பாக்கம் ஏரியாவில் ப்ளக்ஸ் பேனர்கள் வைத்து குறும்படங்களை திரையிட்டு வருகிறார்கள்.

எடிட்டர் பி.லெனின் :
       தமிழகத்தில் சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்குவதை கலைஞர் அவர்கள் அறிமுகப்பட்டுத்தினார்.  அதற்காக அவருக்கு நன்றி சொல்லச் சொன்னார்கள். மறுத்து விட்டோம். மக்களிடம் நல்ல விஷயங்களை கொண்டு சென்று சேர்ப்பதற்காக அரசு தான் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமே தவிர நாங்கள் அல்ல என்று சொல்லி விட்டோம்.


       விழாவில் மறைந்த முனைவர்.கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கும், முனைவர்.த.பரசுராமன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலித் தீர்மானத்தை தோழர்.சு.இராமச்சந்திரன் முன்மொழிந்தார்.

Thursday, 11 February 2016

இத்தாலி இயக்குனர்களைப் பற்றி ...

RUBEN LAGATTOLLA

               Ruben Lagattolla, lives and works in Italy as a cameraman and editor, and his filmmaker experience is mainly build in the region of the Middle East and the Balkans.  He was involved in many sociological field research and investigative documentaries (www.eposweb.org).  He is interested in geopolitics, anthropology and linguistics.  In Syria he realized his first documentary film to deepen his exploration of the condition of the Syrian refugees, when he met in Iraq in 2013 and 2014 during the shooting of other documentary films.  His focus on human conditions usually on comparison between western and eastern lifestyles.

               He started working in 2007 in the news environment among national broadcasters such as SKY and RAI in Rome.  Then, he moved to documentary films production, which has always been his passion.

FILIPPO BIAGIANTI

               Filippo Biagianti was born in Montepulciano in 1971.  After finishing high school he moved to Urbino, Italy, where in 1999 he graduated in Geology.  In 2001 he began to work as a multimedia designer with Studio Imagina of Urbino, producing numerious music videos short films and reportage.  During 2007 – 2010  he worked at the Province of Pesaro and Urbino as a videomaker and photographer.  Since 2010, he has been teaching video editing at the Academy of Fine Arts in Urbino.  He is also a journalist and as a Documentary film maker he has a massive production of about five hundred works.  His favorite topics are the Partisan Resistance in Italy, peasant memory preservation and many others.

ENEA DISCEPOLI

               Enea discepoli is an Italian photographer who helped ruben and Filippo to enter Aleppo in Syria to shoot the film.  Enea had been in Syria several times.
              
               The intent of the document film YOUNG SYRIAN LENSES is to tell the reality of Syria with a human and anthropologic approach, without falling into the rhetoric of religious belonging or the spectacle of war.

               In 2014, Mr Ruben Lagottola, with the help of Mr.Enea Discepoli entered Syria through the Turkish border.  And then travelled to Alleppo, one of the most effected areas, under the harsh regime of Bashar Al Assad.  The intent of the film was originally to cover a photography exhibition by the media activitists of Alleppo, covering the lives of the residents in the warn torn areas.  However, one week prior to Mr.Ruber’s arrival, the school which was to hold the exhibition, was bombed and it never saw the light of the day.

               So MSr.Ruben went ahead to shoot a different film, un-scripted and budget free.  That covered the daily lives of the residents who live in constant fear and pain.  After capturing the footage / back in Italy he and Mr Fillippo Biagauti co-directed the edit of the film to bring as “YOUNG SYRIAN LENSES”


5வது ஆவணப்பட விழாவில் பங்கேற்ற நண்பர்கள்

5வது ஆவணப்பட விழாவில் பங்கேற்ற நண்பர்கள்









5ஆவது ஆவணப்பட குறும்பட விழாவில் இயக்குநர்கள்

5ஆவது ஆ








வணப்பட குறும்பட விழாவில் இயக்குநர்கள்

5ஆவது குறும்பட விழா - முதல் நாள் நிகழ்வுகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும், மும்பை பிலிம் டிவிஷனும் இணைந்து நடத்தும் புதுச்சேரி 5வது சர்வதேச ஆவணப்பட குறும்படத் திருவிழா இன்று 11.02.2016 வியாழக்கிழமை மாலை 430 மணிக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்திலுள்ள ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் வெற்றிகரமாக தொடங்கியது.