Tuesday, 1 March 2016

ப(பி)டித்த கவிதை - அரைக்குட ஆரவாரங்கள்

படித்ததில் பிடித்தது....
அரைக்குட ஆரவாரங்கள் ...

கல்வியேதும் கற்காத கயவர் கூட்டம்
கல்லூரி பள்ளியெனக் கடைவ் ரித்துக்
கல்வியினை விற்கின்ற அவலம் இந்தக்
காசினியில் இங்கன்றி வேறெங் குண்டு ?
செல்வத்தைக் குவிப்பதற்காய்ச் சிந்தை தன்னைச்
சீரழிக்கும் செயலுக்குத் துணையாய் நின்று
அல்வழியில் மதுவிற்று ஆளு கின்ற
அரசாட்சி அரைக்குடத்தின் ஆர வாரம்

சவக்குழியாய்ச் சாலைகள், சாக்க டைகள்;
சந்தையின் நெரிசலெனக் கட்ட டங்கள்
கவர்தலிலே நீர்நிலைகள் எல்லா மிங்கே
காசாகும் பேராசைக் கையூட் டாட்சி;
சுவரோட்டி பெருகிட்ட சுற்றுச் சூழல்;
சூழ்சுவாசக் காற்றெல்லாம் சுரண்டல், ஊழல்;
அவவாழ்வு வாழ்கின்ற அடிமைக் கூட்டம்;
அரசாளும் அரைக்குடங்கள் ஆட்டம், பாட்டம்

ஏருழவர் இல்லத்துள் இருளின் ஆட்சி;
எத்தருக்கே யாவுமெனில் எங்கே மீட்சி ?
வாருகின்ற வரிப்பணத்தைச் சுருட்டி ஏழை
வயிற்றுனிலே அடிப்பதுவோ ? வறுமைக் கோட்டை
வேருடனே நீக்கியதாய் மாயம் காட்டும்
வித்தையிலே மயங்குவதோ ? விழித்தெ ழுந்து
சீருடைய நிறைகுடங்கள் கண்டெ டுப்போம்;
சிதறட்டும் அரைக்குடங்கள் ஆரவாரம்


_கவிஞர்.கே.பி.பத்மநாபன், கோவை
நன்றி : தமிழ் லெமுரியா, மும்


No comments:

Post a Comment