Sunday, 19 February 2017

6ஆவது குறும்பட ஆவணப்பட விழா

6ஆவது குறும்படத் திருவிழாவில் திரையிடப்பட்ட குறும்படம் ROLL NO 41 - தனியார் பள்ளிகளில் விளையாட்டு வீரனாக விளங்கும் குழந்தைகளுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை என்று சொல்லி கண்ணீர் விட்டு இறுதியில் அரசு பள்ளியில் சேரும் ஒரு மாணவனின் பதிவு .. மிக அருமை .. இந்த படத்தை இயக்கி நடித்த அந்த குட்டிப் பையன் மாஸ்டர் பிராகி .. பாராட்டுக்கள் பிராகி.
6ஆவது குறும்படத் திருவிழாவில் திரையிடப்பட்ட குறும்படம் பனை - பனை மரத்தின் சிறப்பம்சங்களை விளக்கும் அருமையான படம் - பனைக்கென ஒரு அரசுத் துறை இருந்தும் அதன் மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதும் கூறப்படுகிறது .. பட இயக்குனர் திரு.அருண்மொழிவர்மன், கடலூர்..
இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் குறித்த ஒரு ஆவணப்படம் - "இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் (1930-2014) - சொன்னால் நம்ப மாட்டீர்கள் இந்தப் படத்தை தயாரித்தது தமிழ் தெரியாத ஒரு இயக்குனர் - திரு.பிஸ்ட் (M.S.BISHT) பிலிம்ஸ் டிவிஷன் தயார்த்துள்ள படம் - மிக மிக சிறப்பாக இருக்கிறது - மிகவும் அருமையான பதிவு --
பிலிம்ஸ் டிவிஷன் பல்வேறு மிக மிக சிறப்பான ஆவணப்படங்களையும், குறும்படங்களையும் பல்வேறு சிறப்பான இயக்குனர்களைக் கொண்டு தயாரித்து வருகிறது. ஆனால் அவை மக்களைச் சென்றடைய என்ன வழி .. ஆனால் அவசியம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்
கோவையில் நடைபெற்ற 1998 பிப்ரவரி 14 சம்பவங்களை ஒட்டி நடைபெற்ற மதக் கலவரங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட 3 நிமிட குறும்படம் "கர்சீப்" - இன்னும் சற்று ஆழமாக யோசித்து கோவைக் கலவரத்தை அருமையான டாக்குமென்ட்ரி படமா எடுத்திருக்கலாமே என்று தோன்றியது.. இயக்குனர் திரு.ஜி.எம்.சண்முகராஜ்

Saturday, 18 February 2017

18.02.2017 நிகழ்வுகள்
6வது சர்வ்தேச ஆவணப்பட குறும்பட விழாவில் 18.02.2017 அன்று திரையிடப்பட்ட படம் WHERE TO INVADAE NEXT என்கிற படம். அமெரிக்கர் ஒருவர் உலகின் சில நாடுகளுக்கு சென்று அங்குள்ள நிலைமையை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்த்து அமெரிக்காவை விட அந்த நாடுகள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதைக் கண்டு பெருமூச்சு விட்டு நம்மையும்ஆச்சரியப்பட வைக்கிறார் ..குறிப்பாக பின்லாந்து ஜெர்மனி,போர்ச்சுகல், நார்வே, டுனீசியா, ஐஸ்லாந்து நாடுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழா மலரை மாண்புமிகு க்.லட்சுமிநாராயணன் அவர்கள் வெளியிட்டார்.
6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் இயக்குனர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களைப் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. 6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் இயக்குனர் பஞ்சு அருணாசலம் அவர்களைப்பற்றிய டாக்குமெண்ட்ரி திரைப்படம் A CREATOR WITH MIDAS TOUCH திரையிடப்பட்டது. அதன் இயக்குனர் திரு.தனஞ்செயன் மற்றும் எடிட்டர்.திரு.;விக்னேஷ் கெளரவிக்கப்பட்டனர்.
6வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் திருமிகு.க.இலட்சுமிநாராயணன், அரசு ஊழியர் சங்கத்தின் கெள்ரவத் தலைவர்.சி.ஹெச்.பாலமோகனன், தோழர்.சு.இராமச்சந்திரன் ...













Thursday, 16 February 2017

புதுச்சேரி குறும்பட ஆவணப்பட விழா - 2017 - பகுதி ஒன்று

6-ஆவது ஆவணப்பட குறும்பட விழா இன்று 16.02.2016 புதுச்சேரி பல்கலைக்கழக ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் இனிமையாக தொடங்கியது. விழாவில் முதல் ஆவணப்படமாக "இறுதி ஊர்வலம்" திரையிடப்பட்டது. இது புதுச்சேரி பல்கலைக் கழக மாணவர்களின் சொந்த தயாரிப்பாகும்.












Tuesday, 29 November 2016

கண்களுக்கு இனிய காட்சிகள்

சமீபத்தில் நண்பர் குழாமுடன் சென்று மகிழ்ந்த இடம் ..














Monday, 14 November 2016

புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம் - தொடக்க விழா

புதுச்சேரியில் உள்ள சிற்றிதழாளர்கள் நலனுக்காக அமைப்பு ஒன்றினைத் தொடங்கினோம். முதலில் புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம் எனப் பெயரிட்டோம். அப்பெயரில் அமைப்பு இருக்கிறது என்பதால் புதுச்சேரி சிறுபத்திரிக்கையாளர் சங்கம் என்கிற பெயரிட்டோம். அதுவும் ஏற்கேனவே தொடங்கப்பட்டு விட்டது என பதிவுத் துறையில் சொல்லப்பட்ட நிலையில் மிகவும் ஆழமாக பல நண்பர்களுடன் ஆலோசித்து "புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம்" எனப்பெயரிட்டோம். பதிவும் கிடைத்து விட்டது.
"புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம்" தொடக்க விழா நாளை மாலை 6 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பய்யர் வீதியில் உள்ள செகா ஆர்ட் கேலரியில் நடைபெற உள்ளது. இயக்கத்தினை திருமிகு.க.இலட்சுமிநாராயணன் - சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைக்க உள்ளார்கள். பத்திரிக்கையாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாருமாகிய தோழர்.மயிலை பாலு சிறப்புரை ஆற்றிட உள்ளார்.
நண்பர்கள் இதனையே அழைப்பாகக் கருதி அவசியம் பங்கேற்க வேண்டுகிறேன் -- லெனின்பாரதி செயலாளர் புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம் --

Thursday, 15 September 2016

பாவலர் தங்கப்பாவின் பூம்பூம்மாட்டுக்காரன் நூல் வெளியீடு



நூல் வெளியீட்டு விழா
பாவலர் தங்கப்பாவின் பூம்பூம் மாட்டுக்காரன் முதலான குழந்தைப் பாடல்கள்.
இடம் : புதுவைத் தமிழ்ச்சங்கம், 45 அடி சாலை, வெங்கட்டா நகர், புதுச்சேரி.
நாள் : 25.09.2016 ஞாயிறு மாலை சரியாக 5.30 மணி
பங்கேற்பு :
பாடல்களுடன் . கலைமாமணி திரு.இ.பட்டாபிராமன்
வெளியிடுபவர் : எழுத்தாளர் பாவண்ணன்
வாழ்த்துரை : பாவலர்.இரா.மீனாட்சி
உடன் வந்து பாடி மகிழ்வடு
பூம் பூம் மாட்டுக்காரக் குடும்பக் குழந்தைகள்

Wednesday, 14 September 2016

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 2015 விருதுகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் 2015 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான நடுவர் குழு முடிவுகள் வருமாறு :
1.சிறந்த நாவலுக்கான அமரர் கே.பாலச்சந்தர் நினைவு விருது
   நூல் : மெளனத்தின் சாட்சியங்கள்
   நூலாசிரியர் : சம்சுதீன் ஹீரா
   பதுப்பகம் : பொன்னுலகம்
2. சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்-     செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது
  
   நூல் : ஆகாயத்தோட்டிகள்
   நூலாசிரியர் : பூர்ணா
   பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
3. சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருது
   நூல் : புழுதிச்சூடு
   நூலாசிரியர் : ம.காமுத்துரை
   பதிப்பகம் : வெர்சோ பேஜஸ்
4. சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது
   நூல் : திப்புசுல்தான்
   நூலாசிரியர் : அர்ஷியா
   பதிப்பகம் : எதிர் வெளியீடு
5. சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது
   நூல் : ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
   நூலாசிரியர் : இ.எம்.எஸ்.கலைவாணன்
   பதிப்பகம் : அறம் பதிப்பகம்
6. சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருது
   நூல் : சிலப்பதிகாரம் மறுவாசிப்பு
   நூலாசிரியர் : தி.சு.நடராஜன்
   பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
7.சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருது
   நூல் : பாணர் இனவரைவியல்
   நூலாசிரியர் : முனைவர் பக்தவச்சலபாரதி
   பதிப்பகம் : அடையாளம்
த மு எ க ச வழங்கும் கு.சி.பா அறக்கட்டளை விருதுகள்
   1. சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது
    நூல் : பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்
    நூலாசிரியர் : மு.முருகேஷ்
    பதிப்பகம் : அகநி
   2. சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருது
    நூல் : ஆதிமொழி
    நூலாசிரியர் : முனைவர்.இரா.மதிவாணன்
    பதிப்பகம் : ஸ்ரீ வித்யாதிராஜ தர்ம சபா
முற்போக்கு கலை இலக்கியத்திற்கு
சிறப்பான பங்களிப்பு செய்த
கலை இலக்கிய ஆளுமைக்கான விருது
பெறுபவர் : மார்க்சிய அறிஞர்
                        எஸ்.வி.ராஜதுரை
வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி ஞாயிறன்று விருது வழங்கும் விழாவும்,நூல்கள் குறித்த ஆய்வரங்கமும் தேனியிலுள்ள வாசவி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
எஸ்.கருணா