கவிதை என்பது யாதெனின் ...
-காவனூர்.ந.சீனிவாசன் (பேச :9600898806)-
கவிதை என்பது தனக்குள் கணக்கில் அடங்காத கூறுகளை மூளை மடிப்புப் போலச் சுருட்டி வைத்துக் கொண்டுள்ளது.
எண்ணற்ற மெளனங்களையும், இடைவெளிகளையுமம், புதிர்களையும், தொனிகளையும் யூகங்களையும் தனக்குள் குடியிருக்க அனுமதித்துத் துல்லியமாக தன்னை கட்டமைத்துக் கொண்டு உணர்ச்சிகளின் வெளியீட்டுத் தளத்தில் ஜீவத் துடிப்புள்ளதாக, தன்னை சிருஷ்டித்துக் கொண்டு தனக்குள் கவிஞனையும், கவிஞனுக்குள் தானுமாக மாறி மாறி ஒரு சுழற்சியாக இயங்கியும், இயக்கியும் ஒரு நிதர்சனத்தை தன் இருப்பில் தக்க வைத்துக் கொள்கிறது.
கவிதை மொழி தனித்துவம் வாய்ந்தது. உணர்ச்சியின் மூலம் தான் கவிதையில் உருவம் அமைகிறது. மொழிக் கூறுகளின் அடிப்படையில் கட்டப்படும் இலக்கியம் தனக்கென்று சுதந்திரமான அமைப்பைக் கொள்கிறது. தற்காலிகக் கவிதைக்குரிய பாடு பொருள்கள் அனைத்திற்கும் நிலைக்களமாக அமைவது சமுதாய உணர்வும், மனிதநேய உணர்வுமே ஆகும்.
மனநெகிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டு துல்லியமான நகர்வுகளை நகர்த்தும் சக்தி வாய்ந்தவொன்று. ஆழ்ந்த சிந்தனையும், நுட்பமான கற்பனைத் திறமும் இணைந்து அமையப் பெறும் படிமத்தினாலேயே கவிதைக்கு சிறப்பு கிடைக்கிறது.
எழுதுபவனின் மனதீட்சண்யம்; புத்துணர்வு தூண்டுதல் இணைந்து தருகிற சொற்பிரயோகம், நுட்பமான பரிமாணத்திலும் வேகம் குறையாத வார்த்தைகள், சூட்சுமமான பொருள் பொதிவு என ஆழமான கூர்மையுடன் யதார்த்தையும் தாங்கி சலனமற்று செல்கிறது கவிதைக்குள் அவரவர் மெளனநதிகள் அலைகளை எழுப்பியவாறு.
கவிதைகளின் உள்ளீடுகளில் அதன் பரப்பு முழுவதும் நிரம்பி வழிகிறது கவிஞர்களின் எல்லையற்ற அனுபவத் துடிப்புகள் ..
சிந்தை நெருப்பைத் தூசிதட்டிவிட்டு கொஞ்சம் வாசிக்க கையிலெடுங்கள். ரசிக்கும் கணங்களை விட ஆழமூழ்கி திளைக்கும் கணங்கள் உன்னதமானவை .................. (பதிவுத் தேதி : 24.10.2014 / 2140)
-காவனூர்.ந.சீனிவாசன் (பேச :9600898806)-
கவிதை என்பது தனக்குள் கணக்கில் அடங்காத கூறுகளை மூளை மடிப்புப் போலச் சுருட்டி வைத்துக் கொண்டுள்ளது.
எண்ணற்ற மெளனங்களையும், இடைவெளிகளையுமம், புதிர்களையும், தொனிகளையும் யூகங்களையும் தனக்குள் குடியிருக்க அனுமதித்துத் துல்லியமாக தன்னை கட்டமைத்துக் கொண்டு உணர்ச்சிகளின் வெளியீட்டுத் தளத்தில் ஜீவத் துடிப்புள்ளதாக, தன்னை சிருஷ்டித்துக் கொண்டு தனக்குள் கவிஞனையும், கவிஞனுக்குள் தானுமாக மாறி மாறி ஒரு சுழற்சியாக இயங்கியும், இயக்கியும் ஒரு நிதர்சனத்தை தன் இருப்பில் தக்க வைத்துக் கொள்கிறது.
கவிதை மொழி தனித்துவம் வாய்ந்தது. உணர்ச்சியின் மூலம் தான் கவிதையில் உருவம் அமைகிறது. மொழிக் கூறுகளின் அடிப்படையில் கட்டப்படும் இலக்கியம் தனக்கென்று சுதந்திரமான அமைப்பைக் கொள்கிறது. தற்காலிகக் கவிதைக்குரிய பாடு பொருள்கள் அனைத்திற்கும் நிலைக்களமாக அமைவது சமுதாய உணர்வும், மனிதநேய உணர்வுமே ஆகும்.
மனநெகிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டு துல்லியமான நகர்வுகளை நகர்த்தும் சக்தி வாய்ந்தவொன்று. ஆழ்ந்த சிந்தனையும், நுட்பமான கற்பனைத் திறமும் இணைந்து அமையப் பெறும் படிமத்தினாலேயே கவிதைக்கு சிறப்பு கிடைக்கிறது.
எழுதுபவனின் மனதீட்சண்யம்; புத்துணர்வு தூண்டுதல் இணைந்து தருகிற சொற்பிரயோகம், நுட்பமான பரிமாணத்திலும் வேகம் குறையாத வார்த்தைகள், சூட்சுமமான பொருள் பொதிவு என ஆழமான கூர்மையுடன் யதார்த்தையும் தாங்கி சலனமற்று செல்கிறது கவிதைக்குள் அவரவர் மெளனநதிகள் அலைகளை எழுப்பியவாறு.
கவிதைகளின் உள்ளீடுகளில் அதன் பரப்பு முழுவதும் நிரம்பி வழிகிறது கவிஞர்களின் எல்லையற்ற அனுபவத் துடிப்புகள் ..
சிந்தை நெருப்பைத் தூசிதட்டிவிட்டு கொஞ்சம் வாசிக்க கையிலெடுங்கள். ரசிக்கும் கணங்களை விட ஆழமூழ்கி திளைக்கும் கணங்கள் உன்னதமானவை .................. (பதிவுத் தேதி : 24.10.2014 / 2140)







