Sunday, 5 October 2014

படித்து மகிழ்ந்த நூல்..
உழைப்பின் நிறம் கருப்பு
சமீபத்தில் நண்பர் ஒருவர் புதுவைப்பரணி இலக்கிய இதழில் நூல் அறிமுகம் பகுதியில் வெளியிடுங்கள் என்று கொடுத்த நூல்.
திருவண்ணாமலைக் கவிஞர்.ஆரிசன் (கைபேசி எண். 9442311118) அவர்கள் தனது இலக்கிய நண்பர்களுக்கு கைபேசி மூலம் அனுப்பிய குறுஞ்செய்தி ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். இது இவரது ஐந்தாவது ஹைக்கூ தொகுதியாகும். அருமையான புகைப்படங்கள் அவரது எழுத்துக்கு மேலும் மகுடம் சேர்க்கின்றன.
சில ஹைக்கூகளைப் பார்க்கலாமா ?
* வரப்பு தகராறு                                          * ஊதிய உயர்வு கேட்டு
   வக்கீல் பாக்கெட்டில்                                அர்ச்சகர்கள் போராட்டம்
   நிலம்                                                                கல்லாக சாமி.
* கோஷ்டிப் பூசலின்றி                             * பயிர் மேய்ந்து
   நிம்மதி தவழ்கிறது                                   கொழுத்தது வேலி
   சுடுகாடு                                                          அரசியல்
* மாடுகள் விடுவித்து                              * தோல் டாக்டருக்கு
   மனிதர்களைப் பூட்டினர்                         பின்னால் இருக்கிறது
   நுகத்தடி உலகமயம்                                 பெரும் "படை"
* இருட்டின் காதலை                               * அம்புகள் தைத்த போதி மரம்
   வெளிச்சத்தில் பேசியது                         ரத்தத்தோடு புத்தர்
   நிலவு                                                              இலங்கை இனவெறி
* சுமையோடு தான்                                  * நீதிமன்றத்தில்
   வாழ்க்கை                                                    விரைவாய் கிடைக்கிறது
   ஆமை                                                            வாய்தா
* ஊர்தோறும் மதுக்கடைகள்               * நடைவண்டிப் பயணம்
   வெறிச்சோடிக் கிடக்கின்றன               இசை சேர்க்கிறது
   நூலகம்                                                          குழந்தையின் கொலுசு
     பல கவிதைகள் படித்து நீண்ட நேரமாகியும் மனதை விட்டு அகல மறுக்கின்றன. அதுவே இந்த நூலின் வெற்றி.   (05.10.2014 - 2040)                              
 

No comments:

Post a Comment