Friday, 13 February 2015

ஆதலினால் காதல் செய்வீர் ...

இன்று (14.02.2015) காதலர் தினம்
சிலரின் கண்களுக்கு காதல் என்றால் காமம் மட்டுமே தெரிகிறது. அதை கழிசடைப் பார்வை என்று கூடக் கொள்ளலாம். அல்லது அவர்கள் பார்வையில் காமம் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படலாம். அது பார்வைக் கோளாறு. காதல் என்பது காமம் மட்டும் சார்ந்தது அல்ல. அது சக உயிர் மீதான அன்பை, தனது ஆசைகளை, ஏக்ககங்களை, பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு என்று கூடக் கொள்ளலாம். காதல் தவறு என்றால் பல தெய்வங்களின் வரலாறே கேள்விக்குறியாகி விடும். எதுவுமே வரம்பு மீறும் போது கண்டிக்கலாம். தவறில்லை.  ஆனால் நான் சொல்வதைக் கேள்.. நீ இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஹிட்லர் பாணியில் கட்டளையிட்டால் அதை ஏற்க முடியாது. இதற்கெல்லாம் பதில் மஹாகவி பாரதி சொன்னது போல .. "ஆதலினால் காதல் செய்வீர்"

No comments:

Post a Comment