Friday, 14 November 2014

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு ரத்து செய்திட இலங்கை அதிபர் ராஜபக்ச ஒப்புதல் அளித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி, நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைக்கவோ, ரத்து செய்யவோ அதிபருக்கு அதிகாரம் உண்டு. இந்திய அரசு மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப்பெற்றவுடன், 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கால்னடை அபிவிருத்தித் துறை அமைச்சருமான ஆறுமுக தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மீனவர்களை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் திருமிகு.நரேந்திர மோடி அவர்களும், இலங்கை அதிபர் திருமி. ராஜபக்ச அவர்களும், ஊவா மாகாண உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் திருமிகு.செந்தில் தொண்டமானும், இலங்கை கால்நடை அபிவிருத்தித் துறை அமைச்சருமான ஆறுமுக தொண்டமானும் பாராட்டுக்குரியவர்கள்.
ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத்தமிழர்களும், சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. எத்தகைய ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக்கூடாது என்பதே நமது கவலை ..


No comments:

Post a Comment