வணக்கம் இன்று (29.09.2014)அழைப்பின் பெயரில் ஏரிகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் சிறிது நேரம் பங்கேற்றேன் . ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்த கருத்தரங்கம். முடிவில் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரியிலுள்ள பாகூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளை சுத்தப்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய தொகை முழுமையாக செலவிடப்படாமல் திருப்பி அனுப்பட்டது என்கிற தகவலைச் சொன்னார்கள் புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க வேண்டும் என்பதற்காக லேஅவுட் போட்டு தேவையானவைகளை வெளியிலிருந்து வாங்கிக் கொள்ளலாம் என்கிற சிந்தனை புதுச்சேரி அரசிடம் இருக்கிறதோ என்றார் இன்னொரு நண்பர். எது எப்படியோ நீர் நிலைகள் பாதுகாப்பது என்பது நமக்கு சம்பந்தம் இல்லாதது என்கிற மன நிலை இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக நகர்ப்புற மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது என்பதுதான் எதார்த்தம். கருத்தரங்கில் இரண்டு உபயோகமான புத்தங்களை கொடுத்தார்கள். அது குறித்து அடுத்து பேசுவோம்
Monday, 29 September 2014
வணக்கம் இன்று (29.09.2014)அழைப்பின் பெயரில் ஏரிகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் சிறிது நேரம் பங்கேற்றேன் . ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்த கருத்தரங்கம். முடிவில் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரியிலுள்ள பாகூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளை சுத்தப்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய தொகை முழுமையாக செலவிடப்படாமல் திருப்பி அனுப்பட்டது என்கிற தகவலைச் சொன்னார்கள் புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க வேண்டும் என்பதற்காக லேஅவுட் போட்டு தேவையானவைகளை வெளியிலிருந்து வாங்கிக் கொள்ளலாம் என்கிற சிந்தனை புதுச்சேரி அரசிடம் இருக்கிறதோ என்றார் இன்னொரு நண்பர். எது எப்படியோ நீர் நிலைகள் பாதுகாப்பது என்பது நமக்கு சம்பந்தம் இல்லாதது என்கிற மன நிலை இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக நகர்ப்புற மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது என்பதுதான் எதார்த்தம். கருத்தரங்கில் இரண்டு உபயோகமான புத்தங்களை கொடுத்தார்கள். அது குறித்து அடுத்து பேசுவோம்
Friday, 26 September 2014
Tuesday, 23 September 2014
படித்ததில் பிடித்தது ..
இளைஞர்களுக்கான மருத்துவ டிப்ஸ்
இளைஞர்கள் மத்தியில் புகைப் பழக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அத்துடன் தவறான உணவுப்பழக்கத்தையும் இளைஞர்கள் விரும்பி உண்ணும் துரித உணவு வகைகளில் ஊட்டச்சத்து இல்லை. அதிக கலோரி தரும் கார்போஹைட்ரேட் தான் அதில் அதிகம். அதனால் உடல் பருமனாகிறது. உடலில் கொழுப்பு கூடுகிறது. இதேபோல் கூல்டிரிங்க்ஸ் வெறும் கலோரி மட்டுமே உள்ளது.
ஊட்டச்சத்தில்லாத உணவு வகைகளைச் சாப்பிடுவது, அதிகப்படியான கொழுப்பு சேவது, இதோடு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தமும் சேர்ந்தால் மாரடைப்பு வந்து விடுகிறது.
அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நெருக்கடியான பணி சூழலில் டென்ஷனுக்கு மத்தியில் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். டென்ஷன் ஏற்படும் போதெல்லாம் புகைக்கிறார்கள். இப்படி வாழ்க்கை முறை தலைகீழாக மாறிவிட்டதால், இளம் வயதிலேயே மாரடைப்பு வருகிறது.
சத்தான உணவு வகைகளுடன் கீரை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தாலே மாரடைப்பைத் தடுக்கலாம். அதோடு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றைத் தினமும் செய்ய மறக்கக் கூடாது.
மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு முதல் ஒரு மணி நேரம் "கோல்டன் ஹவர்". மார்பில் வலி ஏற்பட்டவுடனே, உடனடியாக அருகில் உள்ள எந்த மருத்துவமனயாக இருந்தாலும் சரி, அங்கு சென்று விடுவது நல்லது. நாக்குக்கு அடியில் ஆஸ்பிரின் மாத்திரை வைத்துக்கொள்வது பயன் தரும். இது உறைந்த ரத்தத்தை ஓரளவு கரைக்ககூடும். ஈ.சி.ஜியை பார்த்தாலே மாரடைப்பு வந்திருக்கிறதா என்பது தெரிந்து விடும். மாரடைப்பு உறுதியானால் அதன்பிறகு நமக்கு ஏற்ற மருத்துவமனைக்கு மாறிக் கொள்ளலாம்
-இதய அறுவைசிகிச்சை நிபுணர் பி.மூர்த்தி எஸ்.ஆர்.எம்.மருத்துவமனை -(நன்றி : ஹிந்து தமிழ் நாளிதழ் - 23.09.2014)
Friday, 19 September 2014
தினம் ஒரு மருத்துவம்
பலத்துக்கு
அருகம்புல் கழுவி கணு நீக்கி சுடு தண்ணீர் தெளித்து இடித்துப் பிழிந்த சாறு 100 மில்லி, தேன் 10 மில்லி, மிளகு 2 சிட்டிகை சேர்த்து காலை மட்டும் பருகி ரர கொழுப்பு குறையும். மற்றும் எல்ல மருந்து நச்சுத் தன்மையும் நீங்கி இரத்தம் சுத்தமாகும். எல்லா நோய்களும் நீங்கி உடல் பலமாகும். இரத்தம் உறையாத் தன்மையை நீக்கும். செயற்கை இரத்தத்தை உடல் ஏற்று தக்க வைக்கும். பல வருடமாயுள்ள பிணிக்கு ஒரு வேளை கொடுத்து, பின் உரிய மூலிகையை தர விரைவில் குணம் தரும்
பலத்துக்கு
அருகம்புல் கழுவி கணு நீக்கி சுடு தண்ணீர் தெளித்து இடித்துப் பிழிந்த சாறு 100 மில்லி, தேன் 10 மில்லி, மிளகு 2 சிட்டிகை சேர்த்து காலை மட்டும் பருகி ரர கொழுப்பு குறையும். மற்றும் எல்ல மருந்து நச்சுத் தன்மையும் நீங்கி இரத்தம் சுத்தமாகும். எல்லா நோய்களும் நீங்கி உடல் பலமாகும். இரத்தம் உறையாத் தன்மையை நீக்கும். செயற்கை இரத்தத்தை உடல் ஏற்று தக்க வைக்கும். பல வருடமாயுள்ள பிணிக்கு ஒரு வேளை கொடுத்து, பின் உரிய மூலிகையை தர விரைவில் குணம் தரும்
Wednesday, 10 September 2014
11.9 மஹாகவி நினைவு நாள்
" பராசக்தீ, இந்த உலகத்தின் ஆன்மா நீ.உனக்கு அறிவில்லையா ? உனக்கும் காது கேட்காதா ? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேகும் வரங்களையெல்லாம் கொடுத்து விடக் கூடாதா ?
முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வர வேண்டும். .....
கடங்காரை தொல்லையும், அத்துடன் வந்து கலந்தது.
வைத்தியனுக்கும்க் கொடுக்கப் பணமில்லை. குழப்பம். குழழப்பம் - தீராத குழப்பம். எத்தனை நாட்கள். எத்தனை மாதங்கள். எத்தனை வருஷங்கள் .
பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படடி திருவருள் செய்ய மாட்டாயா ?
என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை அயிரவிதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச்சிறப்பும், பொருட்பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும் .
எனது குடும்பப்பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது உன்னைப் புகழழ்ச்சி புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது....
ஓயாமல் வியாதி பயம் கொண்டு உளைகின்ற நெஞ்சமே தூ தூ தூ கோழை ..
செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது ? பொய் வாயிதா, பொய் வாயிதா, பொய் வாயிதா - தினம் இந்தக் கொடுமை தானா ? சீச்சீ
பராசக்தி - உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு நிச்சயமாக நாஸ்திகனாய் விடுவேன், நீ என்னை அற்பத் தொல்லைகளுக்கு உட்படுத்திக் கொண்டேயிருந்தால்....
மஹாசக்தி - நீ யிருப்பதை எவன் கண்டான் ? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான் ? இந்த உலகம் - சரி, சரி,
இப்போது உன்னைக் வைய மாட்டேன். என்னைக் காப்பாற்று. உன்னைப் போற்றுகிறேன்.
(முனைவர்.சிருங்கை சேதுபதியின் சொற்பொழிவாளர் பாரதியார் நூலிலிருந்து)
என்னே முண்டாசுக் கவிஞனின் ஆக்ரோஷம் . கோபம் .
எல்லாம் சில நொடிகள் தான் .
இவனோடு வாழ முடியாமல் போய் விட்டதே என்பதை நினைக்கும் போது கண்ணில் நீர் திரையிடுகிறது ..
வாழ்க மஹாகவி ..
Friday, 5 September 2014
இன்று படித்து மகிழ்ந்த கவிதை ..
என் தாய்
நான் நீண்ட காலமாய்
என் தாய்தரும்
ரொட்டித் துண்டிற்காக
ஏங்குகிறேன்
என் தாய் தரும்
காபிக்காக,
அந்த உன்னதத்
தொடும் உணர்விற்காக
நான் ஏங்குகிறேன்
குழந்தைப் பருவத்தின் நினைவுகள்
என்னுள் நிறைந்துள்ளன
ஒவ்வொரு நாளும்
வளர்ந்துள்ளன.
நான் இறக்கும் வேளையிலே
என் மதிப்போ,
என் தாய் சிந்திய கண்ணீரின்
உண்மை மதிப்பு.
அதுவே என் வாழ்வின் மதிப்பு.
ஒரு நாள்
நான் உன்னிடம் திரும்பும் வேளையிலே,
என்னை உன் கண் விழியின்
திரையாய் என்னை எடுத்துக் கொள்.
என் எலும்புகளை
புற்களால் போர்த்தி,
அதில் உன் பாதச் சுவடுகளை
பதித்து ஆசீர்வதிப்பாயாக.
உன் தலைமுடி குஞ்சத்தில்
எங்களைக் கட்டிக் கொள்.
உன் அங்கியின்
பின்புறத்தை நான்
பற்றிப் பிடித்துக் கொண்டே
நான் அழிவற்ற சக்தியாய்
தெய்வீகமாய்
உனது ஆழ்மனதைத் தொடுவேன்.
ஒருநாள்
நான் உன்னிடம் திரும்பும் வேளையிலே,
உன் வீட்டிற்கு
என்னை விறகாய்
தீமூட்ட எடுத்துக் கொள்.
உன் வீட்டின் மேற்பரப்பிலே
துணி உலர்த்தும் கயிறாய் நான்.
உனது வாழ்த்தின்றி
நான் மிகவும் தளர்ந்து விட்டேன்.
நிற்கும் சக்தியற்றவனாக,
நான் முதிர்ந்து விட்டேன்.
என் மழலைப் பருவத்தின்
நட்சத்திர வரைபடங்களை
எனக்குக் கொடு.
அவற்றை விழுங்கி
உட்கிரகிப்பேன்.
அதன் மூழம் பாதையை
தேர்ந்தெடுத்து
உன் கூண்டிற்கு
திரும்புவேன்
- கவிஞர்.மஹ்மூத் தர்வீஷ், பாலஸ்தீனம்
நன்றி : திசை எட்டும் - மொழியாக்கக் காலாண்டிதழ் - ஜூலை - செப்ட் 2014
அரபி மொழி இலக்கியச் சிறப்பிதழ் - ஆசிரியர் : குறிஞ்சிவேலன், குறிஞ்சிப்பாடி
Thursday, 4 September 2014
கவிதை உலா ,
இன்று படித்து மகிழ்ந்த ஒரு கவிதையில் சில வரிகள் ..
வந்தவ ரெல்லாம் வாழுகின்றார் - தமிழ்
மண்ணிண் மைந்தரோ வாடுகின்றார் - குறு
மந்திக ளெல்லாம் சிங்கமென - ஒளி
மகுடம் அணிந்தே உலவுகின்றார் - நல்ல
சிந்தனை யாளர் தெருவோரம் - பகல்
சோற்றுக் கின்ரியும் திரிகின்றார் - இந்த
நொந்திடும் நிலைதனை மாற்றும் வரை - இது
நிச்சயம் எனக்கினி ஓய்வில்லை ...
கடவுள் பெயரால் ஒரு கூட்டம் - மிகு
காசுகள் குவிப்பதில் தான்நாட்டம் - பேசும்
படங்கள் காட்டும் ஒருகூட்டம் - காமப்
பாலினை வார்ப்பதில் தான் நாட்டம் - அருங்
கடமை யென்றலரும் ஒரு கூட்டம் - பதவி
கவர்வதில் கவிழ்ப்பதில் தான்நாட்டம் - இந்த
மடமைகள் முற்றாய் மாய்க்கும் வரை - என்றன்
மனத்திற் கென்றும் ஓய்வில்லை
எழுதியவர் முனைவர் ம.நாராயணன், வேலூர்
வெளிவந்த இதழ் தமிழ் லெமூரியா, மும்பை.
Subscribe to:
Comments (Atom)













