இன்று படித்து மகிழ்ந்த கவிதை ..
என் தாய்
நான் நீண்ட காலமாய்
என் தாய்தரும்
ரொட்டித் துண்டிற்காக
ஏங்குகிறேன்
என் தாய் தரும்
காபிக்காக,
அந்த உன்னதத்
தொடும் உணர்விற்காக
நான் ஏங்குகிறேன்
குழந்தைப் பருவத்தின் நினைவுகள்
என்னுள் நிறைந்துள்ளன
ஒவ்வொரு நாளும்
வளர்ந்துள்ளன.
நான் இறக்கும் வேளையிலே
என் மதிப்போ,
என் தாய் சிந்திய கண்ணீரின்
உண்மை மதிப்பு.
அதுவே என் வாழ்வின் மதிப்பு.
ஒரு நாள்
நான் உன்னிடம் திரும்பும் வேளையிலே,
என்னை உன் கண் விழியின்
திரையாய் என்னை எடுத்துக் கொள்.
என் எலும்புகளை
புற்களால் போர்த்தி,
அதில் உன் பாதச் சுவடுகளை
பதித்து ஆசீர்வதிப்பாயாக.
உன் தலைமுடி குஞ்சத்தில்
எங்களைக் கட்டிக் கொள்.
உன் அங்கியின்
பின்புறத்தை நான்
பற்றிப் பிடித்துக் கொண்டே
நான் அழிவற்ற சக்தியாய்
தெய்வீகமாய்
உனது ஆழ்மனதைத் தொடுவேன்.
ஒருநாள்
நான் உன்னிடம் திரும்பும் வேளையிலே,
உன் வீட்டிற்கு
என்னை விறகாய்
தீமூட்ட எடுத்துக் கொள்.
உன் வீட்டின் மேற்பரப்பிலே
துணி உலர்த்தும் கயிறாய் நான்.
உனது வாழ்த்தின்றி
நான் மிகவும் தளர்ந்து விட்டேன்.
நிற்கும் சக்தியற்றவனாக,
நான் முதிர்ந்து விட்டேன்.
என் மழலைப் பருவத்தின்
நட்சத்திர வரைபடங்களை
எனக்குக் கொடு.
அவற்றை விழுங்கி
உட்கிரகிப்பேன்.
அதன் மூழம் பாதையை
தேர்ந்தெடுத்து
உன் கூண்டிற்கு
திரும்புவேன்
- கவிஞர்.மஹ்மூத் தர்வீஷ், பாலஸ்தீனம்
நன்றி : திசை எட்டும் - மொழியாக்கக் காலாண்டிதழ் - ஜூலை - செப்ட் 2014
அரபி மொழி இலக்கியச் சிறப்பிதழ் - ஆசிரியர் : குறிஞ்சிவேலன், குறிஞ்சிப்பாடி
No comments:
Post a Comment