Thursday, 4 September 2014

கவிதை உலா ,
இன்று  படித்து மகிழ்ந்த ஒரு கவிதையில் சில வரிகள் ..

வந்தவ ரெல்லாம் வாழுகின்றார் - தமிழ்
மண்ணிண் மைந்தரோ வாடுகின்றார் - குறு
மந்திக ளெல்லாம் சிங்கமென - ஒளி
மகுடம் அணிந்தே உலவுகின்றார் - நல்ல
சிந்தனை யாளர் தெருவோரம் - பகல்
சோற்றுக் கின்ரியும் திரிகின்றார் - இந்த
நொந்திடும் நிலைதனை மாற்றும் வரை - இது
நிச்சயம் எனக்கினி ஓய்வில்லை ...

கடவுள் பெயரால் ஒரு கூட்டம் - மிகு
காசுகள் குவிப்பதில் தான்நாட்டம் - பேசும்
படங்கள் காட்டும் ஒருகூட்டம் - காமப்
பாலினை வார்ப்பதில் தான் நாட்டம் - அருங்
கடமை யென்றலரும் ஒரு கூட்டம் - பதவி
கவர்வதில் கவிழ்ப்பதில் தான்நாட்டம் - இந்த 
மடமைகள் முற்றாய் மாய்க்கும் வரை - என்றன்
மனத்திற் கென்றும் ஓய்வில்லை 

எழுதியவர் முனைவர் ம.நாராயணன், வேலூர்
வெளிவந்த இதழ்  தமிழ் லெமூரியா, மும்பை.

No comments:

Post a Comment