Friday, 23 January 2015

இன்று திரைப்பட விழா - இரண்டாம் நாள்

புதுச்சேரி சர்வதேச 4வது ஆவணப்பட குறும்படத் திருவிழா
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
இன்று காலை U.R.ANANTHAMURTHY" எனும் குறும்படம் திரையிடப்பட்டது. கர்நாடகாவில் வாழ்ந்து மறைந்த ஒரு இலக்கியவாதியின் முகங்களைக் காட்டும் படம். படத்தின் இயக்குனர் திரு கிரீஸ் காசரவள்ளி திரையிடலுக்குப் பின் நடைபெற்ற உரையாடலில் கலந்து கொண்டார்.
புதுச்சேரி சர்வதேச 4வது ஆவணப்பட குறும்படத் திருவிழாயை ஒட்டி "திரைப்பட விழா சிறப்பு மலர்" யினை திரு.என்.அனில்குமார் (COORDINATOR, MIFF, MUMBAI) வெளியிட திரு.தமிழ்ச்செல்வன், திரு.சிவக்குமார், திரு.சி.ஹெச்.பாலமோகனன் பெற்றுக் கொண்டனர்.













 அதன் பின் இவன் தந்தை" குறும்படம்  திரையிடப்பட்டது. இக்குறும்படத்தை திரு.நீல்சன் (தஞ்சாவூர்) இயக்கியுள்ளார். களம் திரைப்படச் சங்கம் தயாரித்துள்ளது. தந்தையை இழந்த மகனின் மனப்போராட்டத்தை விளக்கும் படம்.
அதனைத் தொடர்ந்து "IN BETWEEN : ISUNG YUN  IN NORTH AND SOUTH KOREA"  எனும் குறும்படம் திரையிடப்பட்டது. இயக்குனர் மரியா ஸ்டாட்மெய்யர். ஐசுங்க் யூன் எனும் செல்லோ இசைக் கலைஞனின் வாழ்க்கையை கூறும் படம்.
பிறகு "DECISION"  எனும் ஹிந்தி குறும்படம் திரையிடப்பட்டது. இப்படத்தை புஷ்பா ராவத் இயக்கியுள்ளார். ஒரு முடிவு எடுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை சொல்லும் படம்.
அதன்பின் "700 007" எனும் அஸ்ஸாமி மொழி குறும்படம் திரையிடப்பட்டது. இதனை அல்தாப் மஸீத் இயக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து "WE THE PEOPLE - `17 UNWANTED INDIANS"  எனும் படம் திரையிடப்பட்டது. ஷார்ஷாவில் பிழைக்கச் சென்று கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களைப் பற்றிய படம்.
பின்னர் கரும்பாறை (BLACK ROCK) எனும் மராத்தி மொழி குறும்படம் திரையிடப்பட்டது. திரு விக்ரந்த் ஜனார்த்தன் பவார் இயக்கியுள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு சஞ்சீவ் குமார் இயக்கிய "TRUE LIFE" எனும் குறும்படம் திரையிடப்பட்டது. உடல் தானத்தை வலியுறுத்தும் படம்.
இறுதியாக  புதுவைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திரு எஸ்.பாலமுருகன் இயக்கிய "NANO BIOTICS" எனும் படம் திரையிடப்பட்டது.  நானோ காந்த ஈர்ப்பைப் பயன்படுத்தி மருத்துவம் செய்வதை கூறும் படம். 

No comments:

Post a Comment